அமைச்சரவை கலைக்கப்படுவதுடன் ரணில் விக்கிரமசிங்க தானாகவே பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு மேலதிக விளக்கம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லையெனவும் தெரிவிக்கிறார் சுசில் பிரேமஜயந்த.
அரசியலமைப்பின் 42வது பிரிவின் கீழே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவையின் பதவிக் காலம் வரையிலேயே அதன் போதான பிரதமரின் பதவிக் காலமும் இருக்க முடியும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ளவரே பிரதமராக இருக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment