அவுஸ்திரேலியாவில் தீவிரவாத திட்டமிடல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் கைது செய்யப்பட்டு விடுதலையாகியுள்ள இலங்கை மாணவன் கமர் நிசாம்தீன் விவகாரம் ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் அவுஸ்திரேலியாவின் முக்கிய விளையாட்டு வீரர் ஒருவரின் சகோதரர் இருப்பதாக பிரபல அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கமர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொலிசார் கைவிட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு பதிவு செய்யவுள்ளதாக கமரின் சட்டத்தரணி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment