ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் இன்றைய தினம் 9 மணி நேர விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வா நாளையும் விசாரிக்கப்படவுள்ளார்.
பொலிஸ் உளவாளி நாமல் குமார வழங்கிய தகவல் மற்றும் ஒலிப்பதிவின் அடிப்படையில் நாலக டி சில்வா இக்கொலைத் திட்டம் பற்றி பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் நாமல் குமாரவை சந்திக்கச் சென்ற இந்திய பிரஜையொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ரோ உளவளியென விமல் வீரவன்ச தெரிவிக்கின்ற அதேவேளை, அவருக்கு மன நிலை சரியில்லையென இந்திய தூதரகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment