ஜமால் கஷோகி விவகாரத்தில் அனைத்து தகவல்களையும் ஒளிவு மறைவின்றி வெளியிடப் போவதாக தெரிவிக்கிறார் துருக்கி அதிபர் அர்துகான்.
எனினும், இது அரசியல் நோக்குடனான அறிக்கையெனவும் சவுதி - துருக்கியிடையே உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் மத்திய கிழக்கு அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஜமால் கஷோகி, தூதரகத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் இறந்தவரின் உடல் பற்றிய விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையிலேயே அர்துகானின் மிரட்டல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment