ஜனாதிபதி - பிரதமரிடையே எந்தப் பிணக்கும் இல்லை: கயந்த - sonakar.com

Post Top Ad

Friday 26 October 2018

ஜனாதிபதி - பிரதமரிடையே எந்தப் பிணக்கும் இல்லை: கயந்த


ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் எதுவித பிணக்குமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் கயந்த கருணாதிலக.



ஜனாதிபதி கொலைத் திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் அக்கறையின்றி இருப்பதாகவும் பிரதமர் - ஜனாதிபதியிடையே கருத்து மோதல் நிலவுவதாகவும் வெளியாகி வரும் தகவல்களை நிராகரித்தே கயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி - மைத்ரி முறுகல் விரைவில் இடைக்கால அரசு உருவாக வழி வகுக்கும் என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment