அரசியல் சட்டங்கள் திருத்தப் பட்டாலும் இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை இருக்க வேண்டும் எனவும் அதனைப் பாதுகாப்பது அரசின் கடமையெனவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
20ம் சட்டத் திருத்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இந்த அரசாங்கம் பௌத்த மத விவகாரங்களில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் பௌத்த துறவிகளைக் கைது செய்வதாகவும் அண்மைக்காலமாக விசனம் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையிலேயே, அவர் நேற்றைய தினம் அம்பலங்கொடயில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment