பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் அடங்கிய வில்லைகளை விழுங்கிய நிலையில் இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் தம்பதியர் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து டுபாய் சென்று அங்கிருந்து இலங்கை வந்தடைந்த நிலையில் அதிகாலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
67 வயது ஆணும் 44 வயது பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment