மைத்ரிபால சிறிசேன அச்சப்படுவதேன்: ராஜித கேள்வி! - sonakar.com

Post Top Ad

Saturday 27 October 2018

மைத்ரிபால சிறிசேன அச்சப்படுவதேன்: ராஜித கேள்வி!


நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்ற போதிலும் நவம்பர் 16 வரை நாடாளுமன்றம் கூடுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி.


இந்நிலையில், மக்கள் அபிலாசையை மதிப்பவராக இருந்தால் நாடாளுமன்றத்தை கூட்ட அச்சப்படுவதேன் என கேள்வியெழுப்பியுள்ளார் ராஜித சேனாரத்ன.

சற்றும் எதிர்பாராத வகையில் நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ள மைத்ரி, அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வகையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment