ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
நாடு பொருளாதார ரீதியாக சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கின்ற கூட்டு எதிர்க்கட்சியினர், மாற்றீடாக மஹிந்தவை பிரதமராக்கி இடைக்கால அரசை உருவாக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment