ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக 200 பேர் கொண்ட இலங்கை இராணுவத்தினர் லெப்டினன்ட் கேர்ணல் கலன அமுனுபுர தலைமையில் அங்கு தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் கலனவின் மனித உரிமை மீறல்கள் பற்றி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக திருப்பியழைக்குமாறும் இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது ஐ.நா.
ஐ.நா எழுதது மூலம் கோரிக்கை விடுத்ததும் குறித்த நபர் உடனடியாக திருப்பியழைக்கப்படுவார் எனவும் இருந்த போதிலும் கலன மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் இலங்கை இராணுவம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment