றஷீதிய்யா அரபுக் கல்லூரி: புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் - sonakar.com

Post Top Ad

Thursday 18 October 2018

றஷீதிய்யா அரபுக் கல்லூரி: புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்



இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கற்று பிரச்சாரம் செய்யும் ஆலீம்களை உருவாக்கும் நோக்கில் அநுராதபுரம், ஹொரவ்பொதானையில் வேரூன்றி நிற்கின்ற அறபுக் கலாபீடம் றஷீதிய்யா அரபுக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

குர்ஆன் மனனம் (ஹிப்ளு), மற்றும் ஷரிஆ (கிதாபு), ஆகிய இரு பிரிவுகளை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளது.

குர்ஆன் மனனம் பிரிவிற்கான தகமைகளாக நல்லொழுக்கமுடையவராகவும் தேகாரோக்கியமுடையவராகவும் அல்குர்ஆனை நன்கு  ஒதத்தெரிந்தவராகவும் இருப்பதோடு, 6 ஆண்டில் கல்வி கற்பவராகவும் 11 வயதினை பூர்த்தியடைந்திருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஷரீஆ(கிதாபு) பிரிவிற்கு  நல்லொழுக்கமுடையவராகவும் தேகாரோக்கியமுடையவராகவும் அல்குர்ஆனை நன்கு  ஒதத்தெரிந்தவராகவும் இருப்பதோடு, 8 ஆண்டில் கல்வி கற்பவராகவும் 13 வயதினை பூர்த்தியடைந்திருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

குறித்த பிரிவுக்கான விண்ணப்பங்களை 2018-11-30ஆம் திகதிக்கு முன்னர் அதிபர், றஷீதிய்யா அரபுக் கல்லூரி, முக்கரவெவ,  ஹொரவ்பொதானை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0252278372, 0773696498, மற்றும் 0777164676 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-முஹம்மட் ஹாசில்

No comments:

Post a Comment