அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் ரவி கருணாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அதிகாலை 2 மணி வரை அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்ற அதேவேளை ரவி கருணாநாயக்க கூட்டு எதிர்க்கட்சியில் இணையப் போவதாக தகவல்களும் பரவி வருகின்றன.
இந்நிலையில், யார் எந்தப் பக்கம் என்பது விடிந்ததும் புலப்படும் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment