ஜமால் கஷோகி விவகாரத்தில் தகவல்களை மூடி மறைப்பதற்கு சவுதி அரேபியா கடும் பிரயத்தனம் செய்வதாக தெரிவிக்கின்ற டொனால்ட் ட்ரம்ப், இதுவே வரலாற்றிலேயே மிக மோசமான மூடி மறைப்பு என தெரிவித்துள்ளார்.
கொலையாளிகளை அமெரிக்கா தண்டிக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் 21 சவுதி பிரஜைகளின் அமெரிக்க விசாவை ரத்துச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சவுதி தூதரகத்துக்குள் இடம்பெற்ற குறித்த கொலை பற்றி முன்னுக்குப் பின் முரணான பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் முஹம்மத் பின் சல்மானுக்கு எதிரான சர்வதேச பிரச்சாரங்களும் இடம்பெறுகின்றன. எனினும், அவருக்கும் கொலைக்கும் தொடர்பில்லையென சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ள அதேவேளை இது 'அரசியல் கொலை' என துருக்கி அதிபர் அர்துகான் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment