துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 39 வயது நபர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 24 October 2018

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 39 வயது நபர் மரணம்!


வீரகீர்த்திய, மகுலதெனிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 39 வயது நபர் உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.



தொடர் கொலைகளும் பரவலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரை தாக்கிய இருவர் பின் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தனிப்பட்ட குரோதத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment