கட்சியை வளர்க்கும் ஜனாதிபதி மக்களைப் புறந்தள்ளிவிட்டதாக தெரிவிக்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்வதாகவும் மீண்டும் புலிகளின் கை ஓங்கினாலேயே தமிழினம் தலை நிமிர்ந்து வாழ முடியும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் காணிகளை விட்டுத்தந்ததை விடுத்து எதுவும் செய்யவில்லையெனவும் போலித்தனமான நிகழ்வுகளையே நடாத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால் புலிகளின் கட்டுப்பாட்டில் கண்ட வாழ்க்கை மீண்டும் மலர வேண்டும் எனவும் அதற்கேற்ப வட-கிழக்கில் புலிகளின் கை ஓங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment