நாளைய தினத்துக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பெற்றோல் பெற்றதற்கான 12 பில்லியன் ரூபா கடன் மீளச் செலுத்தப்படாவிடின் இனிமேல் பெற்றோல் வழங்கப் போவதில்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடனை ஸ்ரீலங்கன் படிப்படியாக மீளச் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல.
இதேவேளை, நஷ்டத்தில் இயங்கும் பயணப் பாதைகளை கைவிட்டு ஸ்ரீலங்கனின் செலவீனத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரியல்ல மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment