விடுதலைப்புலிகள் இயக்கத்தை வட-கிழக்கில் மீளக் கொண்டு வர வேண்டும் என ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக சிங்ஹல ராவய அமைப்பு பொலிசில் முறைப்பாடு செய்துள்து.
இதேவேளை, யாழில் ஆறு வயது சிறுமி பாலியன் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொலையான சம்பவத்தை சுட்டிக்காட்டியே அவர் அவ்வாறு பேசியதால், இவ்வாறான குற்றங்களுக்குக் கடுமையான சட்டம் அவசியப்படுவதை வலியுறுத்தவே விஜயகலா அப்படி பேசியிருக்கலாம் என மேடையில் வீற்றிருந்த அமைச்சர் வஜிர அபேவர்தன விளக்கமளித்துள்ளார்.
எனினும், புலிகளின் காலத்தில் இருந்த சுதந்திரம் கூட தற்போது இல்லாமல் போய் விட்டதாக விஜயகலா தெளிவாக தனதுரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment