மஹிந்தவின் தேர்தல் செலவுக்காக சீனா நிதியுதவி வழங்கியதாக நியுயோர்க் டைம்சில் வெளியான தகவலின் அடிப்படையில் உடனடியாக நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முறையிட்ட ரஞ்சன் ராமநாயக்க, மைத்ரி மீது அவுஸ்திரேலிய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டுக்கு எதிராக ஏன் முறையிடவில்லையென கேள்வியெழுப்பியுள்ளார் நாமல் ராஜபக்ச.
தமது தந்தைக்கு அவ்வாறு பணம் எதுவும் வழங்கப்படவில்லையென மறுத்து வரும் அவர், திட்டமிட்ட அரசியல் சேறு பூசல் என குறித்த சம்பவத்தை வர்ணித்து வருகிறார்.
எனினும், மஹிந்தவுக்கு சீன நிறுவனம் ஆறு மில்லியன் டொருக்கு அதிகமான தொகையை தேர்தல் செலவுக்காக வழங்கியமை தொடர்பில் தம்மிடம் ஆதாரமிருப்பதாக தகவலை வெளியிட்ட பத்திரிகை தெரிவிக்கிறது. இந்நிலையில், மஹிந்த இதற்கெதிராக முடிந்தால் வழக்குத் தொடர வேண்டும் என ஐ.தே.க தரப்பிலிருந்து சவால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment