விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்குவதே தற்போதைய தேவை என நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளார் சபாநாயகர்.
நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் அதன் விதிமுறைகளை விஜயகலா மீறியுள்ளதாக இன்று சபையில் பல உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதோடு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையிலேயே, சபாநாயகர் இது தொடர்பில் சட்டமா அதிபரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment