விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்ம் உருவாக்குவதே முக்கிய நோக்கம் என நேற்றைய தினம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் தெற்கில் பாரிய எதிர்ப்பலையை உருவாக்கியுள்ளது.
மாதர் சங்கங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணிலுக்கு அழுத்தம் பிரயோகித்து வரும் நிலையில் கட்சிக்கும் அவரது கருத்துக்கும் தொடர்பில்லையென அகில விராஜ் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அவரை தற்காலிகமாக பதவி நீக்குவது தொடர்பில் பிரதமர் ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசார, இரவணா பலய உட்பட்ட அமைப்புகளும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment