ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
ஐ.நாவில் தொடர் அவமானங்களை சந்தித்து, தனிமைப்பட்டு வரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழான அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையென ஒன்று அவசியமில்லையென தெரிவிக்க ஆரம்பித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இவ்வருடம் மாத்திரம் இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்தில் இரு தடவைகள் தனிமைப்பட்டுப் போன அமெரிக்கா, மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளைக் கேலிக் கூத்தாக்கி உள்ளதாக தெரிவிக்கிறது.
மனித உரிமைகளை பெருமளவில் மீறும் நாடுகளுக்கும் அங்கு உறுப்புரிமை வழங்கப்பட்டிருக்கின்றமை கேலிக்கூத்தானது என அமெரிக்கா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment