தென் பகுதி நெடுஞ்சாலை விபத்து: இரு வெளிநாட்டு பிரஜைகள் பலி! - sonakar.com

Post Top Ad

Wednesday 20 June 2018

தென் பகுதி நெடுஞ்சாலை விபத்து: இரு வெளிநாட்டு பிரஜைகள் பலி!


தென்பகுதி நெடுஞ்சாலையில் வேன் - லொறி மோதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தாய் - மகள் இரு அவுஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மேலும் இரு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட மூவர் குருந்துகஹகெதனவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமுற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

காலியிலிருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன், தொழிநுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment