25 வருடங்களாக கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வந்த பொல்கஹவெல ஒளிபரப்பு பரிமாற்ற நிலையம் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தொலைக்காட்சி சேவையின் தலைவரும் பிரதமரின் சகோதரருமான ஷான் விக்கிரமசிங்க, தாம் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டுக்குப் பின் இரு தரப்பு இழுபறியின் பின்னணியில் கட்டண நிலுவையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மைத்ரிக்கு எதிரான பிரச்சாரங்களின் பின்னணியில் குறித்த தொலைக்காட்சி சேவைக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ தலையீடு குறித்தோ தமக்கு முறையாக அறிவிக்கப்படவில்லையெனவும் ஷான் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment