திலங்க சுமதிபாலவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான பிரதி சபாநாயகர் பதவிக்கு இன்று மும்முனைப் போட்டி நிலவியிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி அப்பதவிக்குத் தேர்வாகியுள்ளார்.
அங்கஜன் ராமநாதன், சுதர்சினி பெர்னான்டோ புள்ளே ஆகியோரும் போட்டியிட்டிருந்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் 97 வாக்குகளைப் பெற்று ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment