தொலைக்காட்சி சேவையின் பொல்கஹவெல ஒளிபரப்பு பரிமாற்ற மையம் மூடப்பட்டுள்ள விவகாரம் குறித்து தான் தலையிட்டு விசாரணை நடாத்தவுள்ளதுடன் நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர.
ஊடக நிறுவனம் ஒன்று இவ்வாறு நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சியினரும் குரல் கொடுத்துள்ள நிலையில் மங்கள இது தொடர்பில் தலையிடுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னறிவித்தல் எதுவுமின்றி தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்புக்கான ஆணைக்குழு இவ்வாற நடந்து கொண்டுள்ளதாகவும் தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment