பாதாள உலக பேர்வழிகளைக் கைது செய்யும் விசேட அதிரடிப்படையின் நடவடிக்கையின் அங்கமாக மதுஷ் என அறியப்படும் நபரின் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் மேலும் இருவரைக் கைது செய்ய முயன்ற வேளையில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற தேடுதலின் போதே இவ்வாறு தம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பதிலுக்கு சுட்ட போதே குறித்த நபர்கள் பலியானதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment