ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்களை கூட்டு எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியினர் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைத்துக் கொள்ள முன்பாக குறித்த நபர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பதவிகளைத் துறக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள பிரசன்ன ரணதுங்க அதற்கு முன்பாக இணைத்துக் கொள்வதற்கு ஆட்சேபித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் குறித்த குழுவினர் அரசை விட்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment