நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அவ்வாறு எதுவுமில்லையெனவும் அறிவித்துள்ளது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.
நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள தனியார் பவுசர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக தகவல் குறித்தே இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமது சேவைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி இவ்வாறு தனியார் பவுசர் உரிமையாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment