CID விசாரித்த 24 பேரின் பாதுகாவலர்கள் யார்? மஹிந்தானந்த கேள்வி! - sonakar.com

Post Top Ad

Wednesday 6 June 2018

CID விசாரித்த 24 பேரின் பாதுகாவலர்கள் யார்? மஹிந்தானந்த கேள்வி!


அர்ஜுன் அலோசியசின் நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற காசோலைகளை பணமாக்கிக் கொண்ட 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களது பெயர்களை வெளியிட வேண்டும் எனவும் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே.


இதன் போது பிரதியமைச்சர் அஜித் பெரேராவின் பெயரையும் குறிப்பிட்டு மஹிந்தானந்த பேசியிருந்த அதேவேளை தான் யரிடமும் பணம் பெற்றதுமில்லை அலோசியசோடு பழக்கமுமில்லையென அஜித் பெரேரா மறுத்திருந்தார்.

இதேவேளை, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றுக்கு சென்று வரும் மஹிந்தானந்த இது குறித்து பேச முடியாது எனவும் அஜித் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment