கட்டுப்பாடிழந்த ரங்கே பண்டாரவின் மகனின் கார்; வீடு சேதம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 6 June 2018

கட்டுப்பாடிழந்த ரங்கே பண்டாரவின் மகனின் கார்; வீடு சேதம்!


இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத பயணித்த அமைச்சு வாகனம் கட்டுப்பாடிழந்து வீடொன்றில் மோதிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


சிலாபம், கொடாபிட்டிய பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் வாகனத்தில் புத்தளம் பிரதேச சபை தலைவரும் பயணித்ததாகவும் சாரதி கட்டுப்பாட்டையிழந்ததனால் இவ்விபத்து இடம்பெற்று இருவரும் காயமுற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


வீடும் காரும் பலத்த சேதமடைந்துள்ளதோடு காயப்பட்டவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment