இலங்கை கிரிக்கட்டுக்கு சிறப்பு ஆலோசகர்களாக வரும்படி பைசர் முஸ்தபா விடுத்த வேண்டுகோளை சங்கக்கார, மஹேல, முரளி, மகநாம உட்பட முன்னாள் இலங்கை கிரிக்கட் நட்சத்திரங்கள் நிராகரித்துள்ளனர்.
நிர்வாக சிக்கலுக்குள் மாட்டித் தவிக்கும் இலங்கை கிரிக்கட் தற்சமயம் மேற்கொள்ளும் இந்நடவடிக்கை ஆரோக்கியமானதில்லையென முன்னாள் வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் திலங்க சுமதிபாலவுக்கு ஏற்பவே தற்காலிக நிர்வாகமும் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் நிர்வாக தேர்தல் பின் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment