கூட்டாட்சியின் நடவடிக்கைகளால் துவண்டு போயுள்ள மக்கள், மீண்டும் மஹிந்த ஆட்சி மலர்வதையே விரும்புவதாக தெரிவிக்கிறார் சுசில் பிரேமஜயந்த.
மஹிந்த - மைத்ரி இரு அணிகளோடும் உறவைப் பேணி வந்த சுசில் தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறார். இந்நிலையில் மஹிந்த ஆட்சி மலர்வதையே மக்கள் விரும்புவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருட காலமே எஞ்சியிருக்கின்ற நிலையில் ஜுலை 4ம் திகதி முதல் மஹிந்த ஆட்சியின் ஊழலை துரிதமாக விசாரிப்பதற்கான விசேட உயர் நீதிமன்றம் இயங்க ஆரம்பிககவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment