மாத்தறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் பிரபல பாதாள உலக பேர்வழி கொஸ்கொட தாரக்கட உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சம்பவத்தில் காயமுற்ற குறித்த நபர்கள் தப்பியோடியிருந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளனர். அங்கிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் மூலம் விரைந்த பொலிசார் தாரக்க உட்பட சகாக்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்தில் காயமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment