மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்.
முஸ்லிமாக இருக்கும் மஸ்தான் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை கேலிக்கூத்தானது என வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்து சமய விவகாரத்துக்கு ஒரு இந்துவையே நியமித்திருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது நியமனத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment