நாட்டின் கடனை அடைத்துக் கொண்டு வரியையும் குறைப்பதற்கான தீர்வை முடிந்தால் மஹிந்த ராஜபக்ச சொல்லட்டும் என சவால் விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தான் ஆட்சிக்கு வந்தால் 20 வீதத்தால் வரியைக் குறைக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கு முகமாகவே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசின் 21,000 மில்லியன் கடனையும் சேர்த்தே தமது அரசு அடைத்துக் கொண்டிருப்பதாகவும் மஹிந்த முடிந்தால் தனது திட்டத்தைப் பகிரங்கப்படுத்தட்டும் எனவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment