நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா பொலிசார் மேற்கொண்ட 12 மணி நேர தேடுதல் வேட்டையில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 648 பேர் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தோர் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்தோரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவ்வப்போது இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை நான்கு விசேட படையணிகளை களமிறக்கியும் ஞானசாரவைக் கைது செய்ய முடியாமல் போயிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment