பேராசை, குடும்பத்துக்காக சொத்து சேர்க்க நாட்டைக் கொள்ளையடிக்காத ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.
இதற்கான பணியில் மக்கள் மற்றும் ஊடகங்களுடன் சேர்ந்து தானும் போராடப் போவதாக தெரிவிக்கின்ற அவர், நாட்டின் எதிர்கால நலன் கருதி இந்நடவடிக்கை அவசியமாவதாகவும் தெரிவிக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் அனைத்து கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் புதிய கட்சி ஆரம்பித்து துட்டகைமுனு அரசன் விட்ட இடத்திலிருந்து தனது போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக மேர்வின் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment