மத்திய வங்கி பிணை முறி மோசடி பேர்வழி அர்ஜுன் அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை இவ்வாரம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சபாநாயகர்.
குறித்த பட்டியலைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோவுக்குத் தான் அனுப்பிய கடிதத்தின் பின்னணியில் சட்டமா அதிபரை அவர் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றிருப்பதாகவும் இதன் பின்னணியில் தனக்கு பெயர்ப் பட்டியல் கிடைக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அலோசியசிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment