சிறுமி கடத்தல்: நகரசபை தலைவர் உட்பட நால்வர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 4 June 2018

சிறுமி கடத்தல்: நகரசபை தலைவர் உட்பட நால்வர் கைது!


2017ம் ஆண்டு ஐந்து வயது சிறுமியைக் கடத்தி விற்பனை செய்த விவகாரம் ஒன்றில் தலவாக்கல - லிந்துல நகரசபை தலைவர், உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடந்த வருடம் ஜுன் மாதம் 4ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் ஒரு வருட கால விசாரணையின் பின் பொலிசார் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் நுவரெலிய நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment