மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டுள்ள பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மேலும் சிலர் அங்கு தொலைபேசி மற்றும் சுகபோக வசதிகளுடனேயே வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார்ட் என அறியப்படும் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள முக்கியஸ்தர்கள் இவ்வாறு பல சுகபோகங்களை அனுபவிப்பதாகவும் குறிப்பாக அலோசியசும் பாலிசேனவும் சிறையில் எதுவித சிரமமுமின்றி காலந்தள்ளுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அங்கு இடம்பெற்ற சோதனையின் போது மூன்று கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment