சிலாபம், சவரான முஸ்லிம் பாடசாலையில் சக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான மாணவ தலைவன் முஹமத் ரிஸ்வி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் மாலை ஜனாஸா குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி பாடசாலையின் மாணவர் குழுவினால் இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இருவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment