அலோசியசிடம் பணம் வாங்கவில்லை: மலிக் மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 1 June 2018

அலோசியசிடம் பணம் வாங்கவில்லை: மலிக் மறுப்பு!


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதாகியுள்ள அர்ஜுன் அலோசியஸ் 118 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தான் அவ்வாறு எதையும் பெறவில்லையென மறுத்துள்ளார் மலிக் சமரவிக்ரம.


அந்த 118 பேரும் யார்? என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்ற அதேவேளை பலரின் பெயர்களைத் தொடர்பு படுத்தி சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சரத் பொன்சேகா நேரடியாகவே தனக்கு 1 லட்சம் தரப்பட்டதாக தெரிவித்துள்ள போதிலும் பலர் மறுத்து வருவதோடு ஜனாதிபதி செயலாளர் குறித்த பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என சபாநாயகர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment