நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
2011 முதல் பிரதமர் பதவி வகித்து வந்த மரியானோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 180:169 எனும் வாக்கு வீதத்தில் மரியானோ பதவியிழந்துள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment