இலங்கையை முதலீட்டு மையமாக மாற்றியிருக்கிறோம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Saturday 23 June 2018

இலங்கையை முதலீட்டு மையமாக மாற்றியிருக்கிறோம்: ரணில்


சரிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை சீராக்கி முதலீட்டு மையமாக மாற்றியிருப்பதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


நேற்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தொழிலதிபர்களுக்கான விசேட மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் 2015ம் ஆண்டு பாதாளத்தில் வீழ்ந்து கிடந்திருந்த இலங்கையை மீட்டு 2018ல் தெற்காசியாவின் முக்கிய முதலீட்டு மையமாக மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்து மக்கள் வரிச்சுமையால் அவதிப்படுவதாக மஹிந்த ராஜபக்ச அணியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment