மக்கள் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியில் இருப்பதில் பயனில்லையென தெரிவிக்கும் சரத் பொன்சேகா அமைச்சராக இருந்து பயனில்லையெனில் தான் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
காட்டு யானைகள் - மனிதர்கள் பிரச்சினை தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் எனும் அடிப்படையில் தான் முன் வைத்துள்ள தீர்வுக்கு அரசில் மரியாதையில்லையெனில் தான் அவ்வமைச்சுப் பதவியில் நீடிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியேற்றதிலிருந்து ஜனாதிபதியுடன் அவ்வப்போது பொன்சேகா கருத்து முரண்பாட்டை வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment