File photo
இலங்கையில் ஏலவே அறிவித்தபடி வெள்ளியன்று நோன்பு தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது இலங்கை பிறைக்குழு.
அக்கரைப்பற்று, நீர்கொழும்பு மற்றும் மன்னாரில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் இன்றிரவு கூடிய பிறைக்குழு இது குறித்து ஆராய்ந்த நிலையில், தற்போது முடிவில் மாற்றமில்லையென அறிவித்துள்ளது.
பிறைச் சாட்சியங்களை ஐயமற ஏற்றுக்கொள்ளாத முடியாத சூழலில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு நாடுகளிலும் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment