அர்ஜுன் அலோசியசிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியான தகவலின் பின்னணியில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களினால் வினவப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இக்கேள்விக்கு பதிலளித்துள்ள கபீர் ஹாஷிம், தனது தேர்தல் செலவுகளுக்கு இதுவரையிலும் யாரும் பணம் தந்ததில்லையெனவும் அர்ஜுன் அலோசியசுக்கு வேண்டுமானால் தன்னிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பதிலளித்துள்ளார்.
ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது மறுப்பை வெளியிட்டுள்ள அதேவேளை குற்றச்சாட்டுகளும் பரஸ்பரம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment