தன்னை சிறைப்படுத்திய போதிலும் சிறைச்சாலை சீருடையை அணிவிக்க எவருக்குமே முடியாமல் போய் விட்டதாக தெரிவிக்கிறார் ஞானசார.
தூக்குத் தண்டனைக் கைதிக்கே அவ்வாறு ஜம்பர் அணிவிக்க வேண்டும் எனவும் வேண்டுமானால் அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதுகாக்க தான் சிறைக் கூடத்துக்குள் அடைபட்டுக் கிடப்பதோடு வெளியில் வருவதைத் தவிர்த்துக் கொள்வதாக தான் தெரிவித்ததாகவும், இருந்த போதிலும் ஜம்பர் அணிவதற்கு இணங்கவில்லையெனவும் ஞானசார தெரிவித்துள்ளார்.
எனினும், யாராக இருந்தாலும் சிறை சென்றால் ஜம்பர் அணிய வேண்டும் என நீதியமைச்சர் தலதா சூளுரைத்திருந்தமையும் தற்போது ஞானசார பிணையில் விடுதலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment