ஓரிரு மாதங்களுக்கு முன் வரை அணு ஆயுத தாக்குதல் குறித்து பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த வடகொரிய - அமெரிக்க ஜனாதிபதிக் இருவரும் சிங்கப்பூரில் திட்டமிட்டபடி சந்தித்து நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்னர்.
வேக வேகமாக இடம்பெற்ற இம்மாற்றம் குறித்து அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள் போதிலும் ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருந்ததுடன் கிம்மை சந்தித்து கை குலுக்கி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
சந்தித்த சில நொடிகளிலேயே இச்சந்திப்பு பயனுள்ளதா இல்லையா என தன்னால் அனுமானிக்க முடியும் என தெரிவித்திருந்த ட்ரம்ப், தற்போது தமது சந்திப்பு ஆரோக்கியமானது எனவும் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment