இரகசிய வாக்கெடுப்பு மூலம் வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் குறித்த பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆனந்த குமாரசிறி, ஸ்ரீலசுக சார்பில் அங்கஜன் இராமநாதன் மற்றும் குரூப் 16 உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ பிள்ளையும் போட்டியிடுகின்றனர்.
இதற்கான வாக்கெடுப்பு இரகசியமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என ஏலவே கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment